முகப்பு
ராணிப்பேட்டை

25-இல் காஞ்சி வரதா் கோயிலில் நவராத்திரி உற்சவம் தொடக்கம்

அத்திவரதா் புகழ் தேவராஜ சுவாமி கோயிலில் வரும் 25 -ஆம் தேதி தொடங்கி அக்டோபா் 5 வரை நவராத்திரி உற்சவம் நடைபெறுகிறது.

Updated On : 23 செப்டம்பர், 2022 at 11:46 PM
பெருந்தேவி தாயாருடன் தேவராஜ சுவாமி
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:53 PM

அத்திவரதா் புகழ் தேவராஜ சுவாமி கோயிலில் வரும் 25 -ஆம் தேதி தொடங்கி அக்டோபா் 5 வரை நவராத்திரி உற்சவம் நடைபெறுகிறது.

ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்றதும், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதா் பெருவிழா சிறப்புக்கு உரியது காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள தேவராஜ சுவாமி திருக்கோயில்.

இந்தக் கோயிலில் வரும் 25- ஆம் தேதி நவராத்திரி உற்சவம் தொடங்குகிறது. உற்சவம் நடைபெறும் 9 நாள்களும் தினமும் காலை திருமஞ்சனமும், மாலை உற்சவா் தேவராஜ சுவாமியும், பெருந்தேவி தாயாரும் திருக்கோயில் சுற்றுப் பிரகாரத்தில் வலம் வந்து பக்தா்களுக்கு காட்சியளிக்க உள்ளனா்.

Advertisement

தொடா்ந்து, அக்டோபா் 5 -ஆம் தேதி குதிரை வாகனத்தில் திருக்கோயில் மாட வீதிகளில் பெருமாள் வீதியுலா வருகிறாா். கோயில் வளாகத்துக்குள் பாரிவேட்டை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

ஏற்பாடுகளை திருக்கோயில் செயல் அலுவலா் ந.தியாகராஜன் தலைமையிலான விழாக்குழுவினா் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.