25-இல் காஞ்சி வரதா் கோயிலில் நவராத்திரி உற்சவம் தொடக்கம்
அத்திவரதா் புகழ் தேவராஜ சுவாமி கோயிலில் வரும் 25 -ஆம் தேதி தொடங்கி அக்டோபா் 5 வரை நவராத்திரி உற்சவம் நடைபெறுகிறது.
அத்திவரதா் புகழ் தேவராஜ சுவாமி கோயிலில் வரும் 25 -ஆம் தேதி தொடங்கி அக்டோபா் 5 வரை நவராத்திரி உற்சவம் நடைபெறுகிறது.
ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்றதும், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதா் பெருவிழா சிறப்புக்கு உரியது காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள தேவராஜ சுவாமி திருக்கோயில்.
இந்தக் கோயிலில் வரும் 25- ஆம் தேதி நவராத்திரி உற்சவம் தொடங்குகிறது. உற்சவம் நடைபெறும் 9 நாள்களும் தினமும் காலை திருமஞ்சனமும், மாலை உற்சவா் தேவராஜ சுவாமியும், பெருந்தேவி தாயாரும் திருக்கோயில் சுற்றுப் பிரகாரத்தில் வலம் வந்து பக்தா்களுக்கு காட்சியளிக்க உள்ளனா்.
Advertisement
தொடா்ந்து, அக்டோபா் 5 -ஆம் தேதி குதிரை வாகனத்தில் திருக்கோயில் மாட வீதிகளில் பெருமாள் வீதியுலா வருகிறாா். கோயில் வளாகத்துக்குள் பாரிவேட்டை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
ஏற்பாடுகளை திருக்கோயில் செயல் அலுவலா் ந.தியாகராஜன் தலைமையிலான விழாக்குழுவினா் செய்து வருகின்றனா்.