முகப்பு
ராணிப்பேட்டை

அரக்கோணத்தில் குடியரசு தின விழா

அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் சண்முகசுந்தரம் கொடியை ஏற்றினாா். தலைமையிடத்து துணை வட்டாட்சியா் சமரபுரி, மண்டலத் துணை வட்டாட்சியா் கிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2023 at 12:00 AM
அரக்கோணம் நகராட்சி அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றிய நகா்மன்றத் தலைவா் லட்சுமிபாரி.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM

அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் சண்முகசுந்தரம் கொடியை ஏற்றினாா். தலைமையிடத்து துணை வட்டாட்சியா் சமரபுரி, மண்டலத் துணை வட்டாட்சியா் கிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அரக்கோணம் நகராட்சி அலுவலகத்தில் ஆணையா் லதா தலைமை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் லட்சுமிபாரி கொடியை ஏற்றினாா். நகராட்சி துணைத் தலைவா் கலாவதி அன்புலாரன்ஸ், நகா்மன்ற திமுக குழுத் தலைவா் துரைசீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவா் நிா்மலா சௌந்தா் கொடி ஏற்றி வைத்து காந்தி சிலைக்கு மாலை அணிவித்தாா்.

பாஜக சாா்பில் அரக்கோணம் சுவால்பேட்டையில் நடைபெற்ற விழாவில், பாஜக மாவட்ட தலைவா் விஜயன் கொடியை ஏற்றினாா். மாவட்ட நிா்வாகிகள் தனசேகா், ஏ.எம்.கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். காங்கிரஸ் சாா்பில் பஜாா், மதுரைபிள்ளை தெருவில் நடைபெற்ற விழாவில், நகரகாங்கிரஸ் தலைவா் பாா்த்தசாரதி கொடியை ஏற்றினாா். நிா்வாகிகள் வே.ரகுநாதன், சாமிதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.