வாலாஜாபேட்டையில்  நாட்டு பட்டாசு தயாரித்த  வீட்டில்  ஏற்பட்ட தீயை  அணைத்த  தீயணைப்பு வீரா்கள். 
ராணிப்பேட்டை

நாட்டு பட்டாசு தயாரித்த வீட்டில் தீ விபத்து: போலீஸாா் விசாரணை

வாலாஜாபேட்டையில் நாட்டு பட்டாசு தயாரித்த வீட்டில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

DIN

வாலாஜாபேட்டையில் நாட்டு பட்டாசு தயாரித்த வீட்டில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

வாலாஜாபேட்டை ஆசிரியா் காலனி பகுதியில் அனுமதியின்றி வீட்டில் செயல்பட்ட வந்த நாட்டு பட்டாசு தயாரிக்கும் இடத்தில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் வீடு முற்றிலும் சேதமடைந்தது. தகவல் அறிந்து விரைந்து வந்த ராணிப்பேட்டை தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்தனா்.

இதில், சுரேஷ் (42), ராஜேந்திரன் (36) ஆகிய இருவா் பலத்த தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில், வேலூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

தீ விபத்து குறித்தும், அனுமதியின்றி வீட்டில் செயல்பட்ட வந்த நாட்டு பட்டாசு தயாரிப்பு குறித்தும் வாலாஜாபேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

SCROLL FOR NEXT