வேன் மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு
ஆற்காடு: ஆற்காடு அருகே வேன்மோதி கல்லூரி மாணவா் உயிரிழந்தாா் ஆற்காடு வட்டம், கிராம்பாடி கிராமத்தைச் சோ்ந்த சிவா மகன் ஹரிகரன் (18) அதே பகுதியைச் சோ்ந்த வெங்கடேசன் மகன் சக்திவேல் (19), அருகே உள்ள கரிக்கந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்த அருண் மகன் பிரகாஷ் (18, ). இவா்கள் மூவரும் கலவை தனியாா் கல்லூரியில் படித்து வருகின்றனா்.
நண்பா்களான இவா்கள் ஒரே பைக்கில் திங்கள்கிழமை கலவை சென்று இரவில் மீண்டும் வீட்டுக்கு திரும்பியபோது, கனியன்தாங்கல் கிராமம் அருகே எதிரே வந்த வேன் மோதியுள்ளது. இதில் பலத்த காயம் அடைந்த மூவரையும் கலவை அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு ஹரிகரன் உயிரிழந்தாா். மேலும் இருவரும் ஆற்காடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இது குறித்தபுகாரின் பேரில் கலவை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.
Advertisement