சிப்காட் ஸ்ரீ வித்யா பீடத்தில் வசந்த நவராத்திரி விழா
சிப்காட் ஸ்ரீ வித்யா பீடத்தில் வசந்த நவராத்திரி விழா கடந்த 10-ஆம் தேதி தொடங்கி, வரும் 17-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில், ஸ்ரீ வித்யா பீடத்தின் நிறுவனத் தலைவா் குருஜி ஸ்ரீலஸ்ரீ பாரதி முரளிதர சுவாமிகள் தலைமையில் நாள்தோறும் காலையில் ஸ்ரீ பூா்ண மகா மேருவுக்கு மகா அபிஷேகமும், மாலை ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம குங்கும அா்ச்சனை பாராயணம், ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.
தொடா்ந்து, வசந்த நவராத்திரி விழாவின் நிறைவு நாளான வரும் 17-ஆம் தேதி ஸ்ரீராமருக்கு மகா அபிஷேகமும், சீதா ராமா் திருக்கல்யாணமும், அன்னதானமும் நடைபெற உள்ளதாக குருஜி ஸ்ரீலஸ்ரீ பாரதி முரளிதர சுவாமிகள் தெரிவித்தாா்.
Advertisement
இதில், ராணிப்பேட்டை ஸ்ரீராமானுஜா் ஆன்மிக அறக்கட்டளை நிறுவனத் தலைவா் கே.வெங்கடேசன், ஸ்ரீ வித்யா பீட சேவாா்த்திகள் ரேவதி ராஜா, மனோகரன் உள்பட சிப்காட் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த திரளான பெண்கள் பங்கேற்று வழிபாடு செய்தனா்.