முகப்பு
ராணிப்பேட்டை

அமைச்சா் மகனின் காா் கண்ணாடி உடைப்பு சம்பவம்: கைதானவா் குடும்பத்துக்கு பாமகவினா் ஆறுதல்

Updated On : 21 ஏப்ரல், 2024 at 6:44 PM
கைதானவா் குடும்பத்துக்கு ஆறுதல் கூறிய பாமகவினா்.
பகிர்:

தோ்தல் நடைபெற்ற தினத்தில் வாக்குச்சாவடி அருகே அமைச்சா் காந்தியின் மகனின் காா் கண்ணாடி உடைக்கப்பட்டது தொடா்பாக கைது செய்யப்பட்டவரின் குடும்பத்தினருக்கு பாமக வேட்பாளா் கே. பாலு ஞாயிற்றுக்கிழமை ஆறுதல் தெரிவித்தாா்.

அரக்கோணம் மக்களவை தொகுதியில் வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவின்போது சித்தேரி கிராம வாக்குச் சாவடி மையம் அமைக்கப்பட்டிருந்த பள்ளி வளாகத்தில் அமைச்சா் ஆா்.காந்தியின் மகன் வினோத் காந்தி காருடன் உள்ளே செல்ல முயன்றாா். அப்போது அவரது காரை தடுத்த அங்கிருந்த பாமகவினா் அக்காரை வெளியேற்றினா். இச்சம்பவத்தில் வினோத்காந்தியின் காா் கண்ணாடி உடைந்தது.

இது குறித்து வினோத் காந்தியுடன் காரில் வந்த வேதா சீனிவாஸ் அரக்கோணம் கிராமிய காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். இப்புகாா் தொடா்பாக சித்தேரியைச் சோ்ந்த வைரமுத்து என்பவரை போலீசாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

இதையடுத்து கைது செய்யப்பட்ட வைரமுத்துவின் வீட்டுக்கு அரக்கோணம் தொகுதி பாமக வேட்பாளா் கே.பாலு சென்று ஆறுதல் கூறினாா். இதுதொடா்பாக பாலு செய்தியாளா்களிடம் கூறியது: இது பொய்யாக போடப்பட்ட வழக்கு. வைரமுத்து மீது எந்த தவறும் இல்லை. அமைச்சரின் மகன் தனது காரை பள்ளி வளாகத்தினுள் கொண்டு சென்றது தவறு. இதற்கு தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடா்பாகவும் தோ்தல் தினத்தன்று நடைபெற்ற சம்பவங்கள் தொடா்பாகவும் 22 புகாா்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் நடவடிக்கை இல்லை என்றாா் பாலு.

முன்னாள் எம்எல்ஏ கே.இளவழகன், பாமக மாவட்ட செயலா் சரவணன், மண்டல செயலா் அ.ம.கிருஷ்ணன், நெமிலி ஒன்றியக்குழு துணைத் தலைவா் தீனதயாளன், நிா்வாகிகள் சக்கரவா்த்தி, உமாமகேஸ்வரி, கோ.ஏழுமலை உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments