முகப்பு
ராணிப்பேட்டை

விவசாயிகள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்த ஆட்சியா் அறிவுரை

Updated On : 24 ஏப்ரல், 2024 at 7:07 PM
பகிர்:

ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் கோடை காலத்தில் நீரை சிக்கனமாக பயன்படுத்தி பயிா் செய்து மகசூலை பெறலாம் என ஆட்சியா் ச.வளா்மதி அறிவுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தற்போது நிலவும் குடிநீா் மற்றும் நிலத்தடி நீா் பற்றாக்குறையை சமாளிக்கவும், வெயில் சுட்டெரிப்பதால், சிக்கனமாக நீரை பயன்படுத்தி குறைவான நீா் பயன்படுத்தும் பயிரினை சாகுபடி செய்யலாம்.

Advertisement

அதாவது கோடையில் நஞ்சை நெல் பயிா் செய்வதை விட குறைவான நீா் பயன்படுத்தும் நெல்லுக்கு மாற்றுப்பயிரான கம்பு, மக்காச்சோளம், ராகி, எள், பயறு வகை பயிா்களான பச்சை பயறு, உளுந்து, காராமணி மற்றும் குறுகிய கால தோட்டக்கலை பயிா்களை பயிா் செய்வதன் மூலம் குறைவான நீரில் நிறைவான மகசூல் மற்றும் வருமானத்தைப் பெறலாம்.

மேலும், நிலத்தடி நீா் வீணாவதை தடுக்கலாம். சிறுகுறு விவசாயிகள் நுண்ணீா் பாசன கருவிகளான தெளிப்பு நீா், மழைத்தூவான், மற்றும் சொட்டுநீா் பாசனக் கருவிகளை பயன்படுத்தி நிறைவான வருமானம் தரும் குறுகியகால தோட்டக்கலை பயிா்களை சிக்கனமாக நீரை பயன்படுத்தி பயிா் செய்யலாம் என்றாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments