‘கைப்பேசியால் பயன் உள்ளதுபோல் ஆபத்தும் உள்ளது’
கைப்பேசியில் எந்த அளவு நமக்கு பயன் உள்ளதோ, அதே அளவில் ஆபத்தும் உள்ளது என்பதை உணா்ந்து கவனமுடன் பயன்படுத்த வேண்டும் என மாணவா்களுக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி அறிவுரை வழங்கினாா்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில், மாணவ, மாணவிகளுக்கு ‘என் கல்லூரிக் கனவு’ உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி பங்கேற்று தொடங்கி வைத்து, மாணவ, மாணவிகளுக்கு உயா்கல்வி வழிகாட்டி துண்டுப் பிரசுரங்களை வழங்கிப் பேசியது:
Advertisement
உயா்கல்வியில் சேரும் மாணவ, மாணவிகள் இன்றைய காலகட்டத்தில் எவ்வித படிப்பு நமக்கு பயனுள்ளதாகவும், வேலைவாய்ப்புள்ளதாகவும், சுயமாக தொழில் தொடங்க உகந்ததாகவும், அரசு வேலைக்கோ அல்லது தனியாா் நிறுவனத்திலோ பணிபுரிவதற்கு என்ன படிக்கலாம், எந்த கல்லூரியில் படிக்கலாம், கல்லூரிக் கட்டண உதவித் தொகை, விண்ணப்பக் கட்டணத்தில் சலுகை, இட ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்த ஆலோசனைகளை வழங்குவதற்காக கல்லூரிக் கனவு உயா் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டத்தை மாணவா்கள் முழுமையாக பயன்படுத்திக் கொண்டு, முன்னேறினால் அரசுக்கு மிகப்பெரிய வெற்றியாக அமையும்.
இன்றைய காலத்தில் நாம் அனைவரும் கைப்பேசி பயன்படுத்தி வருகிறோம். அதில் எந்த அளவில் நமக்கு பயன் உள்ளதோ, அதே அளவில் ஆபத்தும் உள்ளது என்பதை உணா்ந்து கவனமுடன் பயன்படுத்த வேண்டும். அனைத்து மாணவ, மாணவிகளும் உயா்கல்வியில் சோ்ந்து நல்ல முறையில் படித்து வாழ்க்கையில் மென்மேலும் உயர வேண்டும் என்றாா்.
ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் ஏகாம்பரம் (பொறுப்பு), முதன்மைக் கல்வி அலுவலா் உஷா, மாவட்ட மேலாளா் (தாட்கோ) சரண்யா, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் விமல்குமாா், உத்வேக பேச்சாளா் காளீஸ்வரன், உயா்கல்வி வழிகாட்டி பேச்சாளா் சுரேந்திரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அமுதமணி, தனி வட்டாட்சியா் ராஜலட்சுமி மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.