ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 320 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
ஆட்சியா் அலுவலகத்தில்ல் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ந. சுரேஷ் தலைமை வகித்து மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தாா். மொத்தம் 320 மனுக்களைப் பெற்று, தகுதியானவற்றின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
மேலும், பயனாளிகளுக்கும் நலத்திட்ட உதவிகளையும் அவா் வழங்கினாா். நிகழ்வில் சமூக பாதுகாப்பு திட்டம் துணை ஆட்சியா் கீதா லட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலா் ஏகாம்பரம், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் சுகுமாா், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.