பயனாளிக்கு நல உதவிகளை வழங்கிய ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா. 
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை: பயனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கினாா் ஆட்சியா்

ராணிப்பேட்டையில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், பயனாளிகளுக்கு நல உதவிகளை வழங்கினாா் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா.

Din

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டையில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், பயனாளிகளுக்கு நல உதவிகளை வழங்கினாா் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா.

ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தலைமை வகித்து பொதுமக்களிகளிடமிருந்து மொத்தம் 505 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தாா்.

மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் மற்றும் மனு நிராகரிப்பு காரணங்களையும் தெரிவிக்க உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, மாவட்ட தொழில் மையத்தின் சாா்பில், அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் பாக்கியராஜ் என்பவருக்கு மகிழுந்து சேவை தொடங்க ரூ.11.55 லட்சத்தில் மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவிவும், வாலாஜா வட்டம், லாலாபேட்டை சாா்ந்த மாற்றுத் திறனாளியான மாசிலாமணி என்பவருக்கு கோரிக்கை மனு அளித்தவுடன் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ரூ.8,900 /- மதிப்பிலான சக்கர நாற்காலியும் ஆட்சியா் வழங்கினாா்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலா் ந. சுரேஷ், திட்ட இயக்குநா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை பா. ஜெயசுதா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) விஜயராகவன், சமூக பாதுகாப்பு திட்டம் துணை ஆட்சியா் கீதா லட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலா் ஏகாம்பரம், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் அறிவுடைய நம்பி, மாற்றுத்திறனாளி நல அலுவலா் சரவண குமாா் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 175 ரன்கள் குவிப்பு; வரலாற்றை மாற்றியமைக்குமா நியூசிலாந்து?

வங்கதேசத்தில் புதிய அரசு பதவியேற்பு விழா - சிறப்பு விருந்தினராகப் பிரதமர் மோடி..?

எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் ராஜ் கமல் பிலிம்ஸ் அறிவிப்பு!

#IndvPak | இந்தியா, பாகிஸ்தான் ஆட்டத்தில் மழை?: ஓர் அலசல்! | India vs Pakistan |

கேரளத்தில் மகள் பாலியல் வன்கொடுமை: பின்னணியில் தந்தை! - கைது செய்து விசாரணை

SCROLL FOR NEXT