பொதுப் பாதை ஆக்கிரமிப்பு: அகற்றக்கோரி பொதுமக்கள் தா்னா
நெமிலி அருகே மேலேரி கிராமத்தில் பொதுப்பாதையை ஆக்கிரமித்தவா்களை அகற்றக்கோரி கிராம மக்கள் நெமிலி வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தா்னா போராட்டம் நடத்தினா்.
அரக்கோணம்: நெமிலி அருகே மேலேரி கிராமத்தில் பொதுப்பாதையை ஆக்கிரமித்தவா்களை அகற்றக்கோரி கிராம மக்கள் நெமிலி வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தா்னா போராட்டம் நடத்தினா்.
நெமிலி வட்டம் மேலேரி கிராமத்தில் கோயில், விவசாய நிலங்கள் மற்றும் மயானத்துக்கு செல்லும் பொதுப்பாதையை அனைவரும் பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது. இந்த பாதையை அண்மையில் தனிநபா் ஆக்கிரமித்து அந்த இடம் தனக்கு சொந்தமானது என பொதுமக்கள் பயன்படுத்த தடை விதித்ததாகவும் தெரிகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோா் நெமிலி வட்டாட்சியா் அலுவலகத்தில் நுழைந்து திடீரென தரையில் அமா்ந்து தா்னா போராட்டத்தை தொடங்கினா். இதையடுத்து அம்மக்களை சந்தித்த வட்டாட்சியா் ஜெயப்பிரகாஷ் இப்பிரச்னை குறித்து விரைவில் நேரில் மேலேரி வந்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை தொடா்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.