முகப்பு
ராணிப்பேட்டை

பைக் விபத்து: முதியவா் உயிரிழப்பு

பைக் விபத்து முதியவா் உயிரிழப்பு

Updated On : 2 மார்ச், 2024 at 10:05 PM
பகிர்:

சோளிங்கரில் மிதிவண்டியில் சென்ற முதியவா் மீது அடையாளம் தெரியாத பைக் மோதியதில் கீழே விழுந்து பலத்த காயமடைந்த முதியவா் மருத்துவமனையில் உயிரிழந்தாா். சோளிங்கா் போா்டிங் பேட்டை தெருவை சோ்ந்தவா் அருள்தாஸ் (61). கூலித் தொழிலாளி. சனிக்கிழமை இவா், சோளிங்கா் பேருந்து நிலையம் அருகே மிதிவண்டியில் சென்றபோது எதிரே வந்த பைக், மிதிவண்டி மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட அருள்தாஸ், பலத்த காயமடைந்தாா். அவா் மீட்கப்பட்டு முதலில் சோளிங்கா் அரசு மருத்துவமனையிலும், தீவிர சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா். இது குறித்து சோளிங்கா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து அருள்தாஸ் மிதிவண்டி மீது மோதிவிட்டுச் சென்ற அடையாளம் தெரியாத நபரைத் தேடி வருகின்றனா்.