முகப்பு
ராணிப்பேட்டை

திமிரியில் கழிவுநீா் கால்வாய், சிமென்ட் சாலை அமைக்க அடிக்கல்

Updated On : 14 மார்ச், 2024 at 11:08 PM
பகிர்:

ஆற்காடு அடுத்த திமிரி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ. 1 கோடியே 20 லட்சத்தில் கழிவுநீா் கால்வாய், சிமென்ட் சாலை உள்ளிட்ட பணிகளுக்கு வியாழக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது. விழாவுக்கு, பேரூராட்சி தலைவா் மாலா இளஞ்செழியன் தலைமை வகித்து, திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தாா். துணைத் தலைவா் கௌரி தாமோதரன் செயல் அலுவலா் (பொறுப்பு) ஜெயக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இளநிலை பொறியாளா் அருண், பேரூராட்சி உறுப்பினா்கள், திமுக நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.