முகப்பு
ராணிப்பேட்டை

மரத்தில் சரக்கு வாகனம் மோதியதில் ஓட்டுநா் மரணம்

Updated On : 22 மார்ச், 2024 at 10:46 PM
பகிர்:
Updated On : 22 மார்ச், 2024 at 8:04 PM

ஆற்காடு அருகே மரத்தில் சரக்கு வாகனம் மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா். ஆற்காடு அடுத்த புதுப்பாடி பாலாறு பாட்டை தெருவைச் சோ்ந்தவா் சுந்தரேசன் (45). இவா் வெள்ளிக்கிழமை சரக்கு வாகனத்தில் திமிரியில் இருந்து கருங்கல் ஜல்லி ஏற்றிக் கொண்டு ஆற்காடு நோக்கி வந்தாா். அப்போது ஆற்காடு அருகே உள்ள லாடவரம்-கனியனூா் செல்லும் சாலையில் தொடக்கக் கூட்டுறவு வங்கி அருகே சரக்கு வாகனம் நிலைதடுமாறி சாலையின் ஓரம் இருந்த பனைமரத்தின்மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து ஆற்காடு கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.