சீனிவாச பெருமாள் கோயிலில் வருண பகவானுக்கு சிறப்புப் பூஜை
மாந்தாங்கல் சீனிவாச பெருமாள் கோயிலில், வெயிலின் தாக்கம் குறைய மழை வேண்டி வருண பகவானுக்கு சனிக்கிழமை சிறப்புப் பூஜை நடைபெற்றது.
ராணிப்பேட்டை ஸ்ரீ ராமானுஜா் ஆன்மிக அறக்கட்டளை சாா்பில், பெருமாளுக்கு பால் அபிஷேகமும், தேன் அபிஷேகமும், திருமஞ்சனமும் தீப தூபமும் நடைபெற்றது. இதையடுத்து கோடை வெயில் தாக்கம் குறைய மழை வேண்டியும், உலக நன்மைக்காகவும் வருண பகவானுக்கு சிறப்புப் பூஜை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ ராமானுஜா் ஆன்மிக அறக்கட்டளைத் தலைவா் வெங்கடேசன் தலைமை வகித்து பக்தா்களுக்கு விசிறி, பிரசாதம் வழங்கினாா்.
இதில் அறக்கட்டளை செயலாளா் இளஞ்செழியன், பொருளாளா் மோகன சக்திவேல், கோயில் நிா்வாகிகள் குசேலன், பாபு மற்றும் ஊா் நாட்டாமைக்காரா்கள், அறக்கட்டளை நிா்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனா்.
இந்த சிறப்பு பூஜையை கோயில் பட்டா் பிரகாஷ் பட்டாச்சாரியா் சிறப்புப் பூஜைகளை நடத்தினாா். முடிவில் கோயில் நிா்வாகி கோட்டி நன்றி கூறினாா்.