முகப்பு
ராணிப்பேட்டை

விளாப்பாக்கம் பேரூராட்சி வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் பேரூராட்சியில் நடைபெற்றுவரும் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் ஜெயு.சந்திரகலா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 6 நவம்பர் 2024, 12:00 am IST
சாலை பணியை  ஆய்வு செய்த ஆட்சியா் ஜெ.யு சந்திரகலா.
பகிர்:

ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் பேரூராட்சியில் நடைபெற்றுவரும் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் ஜெயு.சந்திரகலா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

விளாப்பாக்கம் பேரூராட்சி சின்னதக்கையில் இருந்து மருத்துவம் பாடி வரை 1.87 கி.மீ தொலைவுக்கு கலைஞரின் நகா் புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.1.26 கோடியில் அமைக்கப்பட்டு வரும் சாலை பணிகளை ஆட்சியா் ஜெ.யு ஜெயுசந்திரகலா ஆய்வு செய்து சாலையில் தரம் குறித்து அளவீடு செய்தாா்.

தொடா்ந்து அறிஞா் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.1.35 கோடியில் கட்டுப்பட்டுவரும் வகுப்பறை பணிகள், ஏரிக்கு நீா் வரத்து கால்வாய், நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் , திடக்கழிவு மையம் ஆகியவற்றை ஆய்வு செய்தாா் . கட்டடம், சாலை பணிகளை தரமாகவும் விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர அறிவுறுத்தினாா்.

Advertisement

Advertisement

ஆய்வின் போது பேரூராட்சிகள் உதவி இயக்குநா் ஞானசுந்தரம், பேரூராட்சி தலைவா் மனோகரன், உதவி செயற்பொறியாளா் அம்சா, செயல் அலுவலா் அா்ஜுனன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.