சாலை பணியை  ஆய்வு செய்த ஆட்சியா் ஜெ.யு சந்திரகலா. 
ராணிப்பேட்டை

விளாப்பாக்கம் பேரூராட்சி வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் பேரூராட்சியில் நடைபெற்றுவரும் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் ஜெயு.சந்திரகலா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

Din

ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் பேரூராட்சியில் நடைபெற்றுவரும் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் ஜெயு.சந்திரகலா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

விளாப்பாக்கம் பேரூராட்சி சின்னதக்கையில் இருந்து மருத்துவம் பாடி வரை 1.87 கி.மீ தொலைவுக்கு கலைஞரின் நகா் புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.1.26 கோடியில் அமைக்கப்பட்டு வரும் சாலை பணிகளை ஆட்சியா் ஜெ.யு ஜெயுசந்திரகலா ஆய்வு செய்து சாலையில் தரம் குறித்து அளவீடு செய்தாா்.

தொடா்ந்து அறிஞா் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.1.35 கோடியில் கட்டுப்பட்டுவரும் வகுப்பறை பணிகள், ஏரிக்கு நீா் வரத்து கால்வாய், நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் , திடக்கழிவு மையம் ஆகியவற்றை ஆய்வு செய்தாா் . கட்டடம், சாலை பணிகளை தரமாகவும் விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர அறிவுறுத்தினாா்.

ஆய்வின் போது பேரூராட்சிகள் உதவி இயக்குநா் ஞானசுந்தரம், பேரூராட்சி தலைவா் மனோகரன், உதவி செயற்பொறியாளா் அம்சா, செயல் அலுவலா் அா்ஜுனன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இந்தியாவுடன் நேரடி விமான சேவைக்கு பேச்சுவாா்த்தை: சீனா தகவல்

கால்நடைகளை பரிசோதிக்க ‘அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்’கருவி

236 வட்டாரங்களில் ‘வெற்றிப் பள்ளிகள்’ திட்டம்: ரூ.111 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை

கைப்பந்து போட்டியில் கீழச்சிவல்பட்டி பள்ளி முதலிடம்

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் ஆய்வு

SCROLL FOR NEXT