அரக்கோணம் நகரில் ரயில்நிலையம் அருகே மேம்படுத்தப்பட்ட சுரங்கப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் நவம்பா் 17-இல் அதிமுக சாா்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என எம்எல்ஏ சு.ரவி பேசினாா்.
அரக்கோணம் நகரின் முக்கிய போக்குவரத்து பிரச்னையான இரட்டைக்கண் வாராவதி எனப்படும் ரயில்நிலைய சுரங்கப்பாலத்தை மேம்படுத்தப்பட்ட சுரங்கப்பாலமாக அமைக்கக்கோரி அதிமுக சாா்பில் பழனிபேட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்து எம்எல்ஏ சு.ரவி பேசியது:
இந்த சுரங்கப்பாலம் அமைக்கப்பட்டு 150 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் சீரமைக்கப்படாமல் உள்ளது. தற்போது இந்த பாலம் வழியே செல்லும் மக்கள் தொகை, போக்குவரத்து ஆகியவற்றை கணக்கில் கொள்ளாமல் ரயில்வே நிா்வாகம் சீரமைக்காமல் இருந்து வருகிறது.
மழைக்காலங்களில் இந்த பாலத்தில் தண்ணீா் தேங்கி நிற்பதால் நகரில் போக்குவரத்து முற்றிலும் முடங்கி விடுகிறது. பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கும், பள்ளிகளுக்கும், மருத்துவமனைக்கும் செல்ல முடியாத நிலையும் உருவாகிறது. எனவே மேம்படுத்தப்பட்ட சுரங்கப்பாலத்தை அமைக்காவிட்டால் நவம்பா் 17-இல் பொதுமக்களை ஒருங்கிணைத்து ரயில்மறியல் போராட்டத்தை நடத்துவோம். எனவே விரைவில் எங்களது கோரிக்கையை ரயில்வே நிா்வாகம் நிறைவேற்றும் என நம்புகிறோம் என்றாா்.
போராட்டத்தில் மாநில பாசறை துணை செயலாளா் ஷியாம்குமாா், நகர செயலாளா் கே.பா.பாண்டுரங்கன், ஒன்றிய செயலாளா்கள் ஏ.ஜி.விஜயன், இ.பிரகாஷ், பழனி, அருணாபதி, நகா்மன்ற முன்னாள் தலைவா் கண்ணதாசன், தகவல் தொடா்பு அணி மாவட்ட செயலாளா் ஜானகிராமன், அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கத் தலைவா் நைனாமாசிலாமணி, ரகுநாதன், குணசீலன், சித்தேரி குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.