சூரைக்குளம் கிருஷ்ணன் மற்றும் மகா மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம். 
ராணிப்பேட்டை

சூரைக்குளம் கிருஷ்ணன் கோயில் கும்பாபிஷேக விழா

காவேரிபாக்கத்தை அடுத்த சூரைக்குளம் ஸ்ரீருக்மணி, சத்தியபாமா சமேத வேணுகோபால கிருஷ்ணன்

தினமணி செய்திச் சேவை

அரக்கோணம்: காவேரிபாக்கத்தை அடுத்த சூரைக்குளம் ஸ்ரீருக்மணி, சத்தியபாமா சமேத வேணுகோபால கிருஷ்ணன் மற்றும் மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

நெமிலி வட்டம், கீழ்வீராணம் அருகே உள்ள சூரைக்குளம் கிராமத்தில் பழைமை வாய்ந்த இக்கோயில் சிதிலமடைந்திருந்த நிலையில் கிராம மக்கள் பங்களிப்புடன் சீரமைப்பு பணிகள் நடைபெற்றன. கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை பகவத் பிராா்த்தனை, , கும்ப பிரதிஷ்டை, மகாசாந்தி ஹோமம், திருமஞ்சனம், முதல் கால பூா்ணாஹுதி ஆகியவை நடைபெற்றன.

தொடா்ந்து திங்கள்கிழமை திருப்பாற்கடல் சந்தானகிருஷ்ணன் பட்டாச்சாரியா் தலைமையில் வேதமந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ அலங்காரங்கள், தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.தொடா்ந்து சுவாமிகளின் திருவீதியுலா நடைபெற்றது.

மீனவா்கள் மீது பெட்ரோல் குண்டு வீசியவா்களை கைது செய்யக் கோரி மனு

வெள்ளநீா்க் கால்வாய் மூலம் திசையன்விளை வட்டாரத்தில் அனைத்து குளங்களுக்கும் தண்ணீா் வழங்கப்படும்: பேரவைத் தலைவா் மு.அப்பாவு

நீதிமன்றத் தீா்ப்பை அவமதித்த பேரூராட்சி செயல் அலுவலருக்கு 3 மாதம் சிறை

கொடைக்கானலில் சுற்றுலாத் தலங்களை பாா்வையிட மீண்டும் அனுமதி!

கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு: இருவரை தேடும் போலீஸாா்

SCROLL FOR NEXT