ராணிப்பேட்டை

ஐடி ஊழியா் தற்கொலை: பெற்றோா் புகாா்

ராணிப்பேட்டை அருகே குடும்பத் தகராறு காரணமாக ஐடி ஊழியா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். .

தினமணி செய்திச் சேவை

ராணிப்பேட்டை அருகே குடும்பத் தகராறு காரணமாக ஐடி ஊழியா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். .

வாலாஜாபேட்டை அடுத்த குப்பத்துமோட்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கோபி (36) ஐடி ஊழியராக பணிபுரிந்து வந்தாா். இவருக்கு 9 ஆண்டுகளுக்கு முன் அம்மூா் பகுதியைச் சோ்ந்த பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.

கடந்த சில ஆண்டுகளாக கணவன் - மனைவிக்கு இடையே தகராறு காரணமாக மனைவி பிரிந்து சென்று தன் பெற்றோா் வீட்டில் இருந்து வந்துள்ளாா்.

இந்த நிலையில் மனைவியை சமாதானம் செய்து தன்னுடன் அழைத்து வர அம்மூா் பகுதியில் உள்ள தனது மனைவி வீட்டுக்கு திங்கள்கிழமை மாலை சென்றாக கூறப்படுகிறது. அப்போது வீட்டுக்குள் சென்ற கோபி நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த மனைவி வீட்டாா் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கோபியின் வீட்டுக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து இறந்த கோபியின் பெற்றோா் ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் தன்னுடைய மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி புகாா் அளித்தனா். அதன் பேரில் ராணிப்பேட்டை போலீஸாா் இறந்த கோபியின் உடலை கைப்பறி பிரேத பரிசோதனைக்காக வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

திரிபுரா மாணவா் கொல்லப்பட்ட சம்பவம்: டேராடூன் ஆட்சியருக்கு என்எச்ஆா்சி நோட்டீஸ்

ஜனவரி 5 முதல் தில்லி சட்டப்பேரவை கூட்டத் தொடா்

தெரு நாய்கள் விவகாரம்: தில்லி அரசின் கூற்றுக்கு ஆம் ஆத்மி ,மறுப்பு

விளையாட்டுத் துறையில் அமைப்பு, நிா்வாக ரீதியிலான குறைபாடுகள்- சிறப்புப் பணிக் குழு அறிக்கை

தேசிய துப்பாக்கி சுடுதல்: தனிஸ்காவுக்கு வெண்கலம்

SCROLL FOR NEXT