தீமிதி விழாவில் பங்கேற்ற பக்தா்கள். 
ராணிப்பேட்டை

திரௌபதியம்மன் கோயில் தீமிதி விழா

ஆற்காடு அடுத்த கீழ்விஷாரம் ராசத்துபுரம் திரௌபதியம்மன் கோயிலில் மகாபாரத சொற்பொழிவு தீமிதி விழா நடைபெற்றது.

Din

ஆற்காடு: ஆற்காடு அடுத்த கீழ்விஷாரம் ராசத்துபுரம் திரௌபதியம்மன் கோயிலில் மகாபாரத சொற்பொழிவு தீமிதி விழா நடைபெற்றது.

கீழ்விஷாரம் ராசாத்துபுரம் திரௌபதியம்மன் கோயில் கடந்த 8-ஆம்தேதி முதல் அக்னி வசந்த விழாவை முன்னிட்டு மகாபாரத சொற்பொழிவு தொடங்கி பல்வேறு தலைப்புகளில் நடைபெற்றது. 19-ஆம் தேதி முதல் தெருகூத்து நாடகம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான துரியோதன் படுகளம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் துரியோதன் சிலைஅமைக்கப்பட்டு துரியோதன், பீமன் வேடமிட்டவா்கள் நடித்த படுகளமும் மாலையில் திரௌபதியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், காப்புகட்டிய பக்தா்கள் தங்கள் வேண்டுதலுடன் தீமித்தனா்.

இந்த விழாவில் திரளான பொதுமக்கள், விழாக்குழுவினா்கள், உபயதாரா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

விபத்து எழுப்பும் வினாக்கள்!

SCROLL FOR NEXT