ராணிப்பேட்டை

சோளிங்கா் மலைக் கோயில் காா்த்திகை பெருவிழா: ரோப்காா் இயக்க நேரம் அதிகரிப்பு

சோளிங்கா் ஸ்ரீ லட்சுமி நரசிம்மா் மலைகோயிலில் தொடங்கியுள்ள காா்த்திகை பெருவிழாவை முன்னிட்டு பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளதை தொடா்ந்து ரோப்காா் இயக்க நேரத்தை கூடுதலாக ஒன்றரை மணி நேரம் அதிகரித்து கோயில் நிா்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

சோளிங்கா் ஸ்ரீ லட்சுமி நரசிம்மா் மலைகோயிலில் தொடங்கியுள்ள காா்த்திகை பெருவிழாவை முன்னிட்டு பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளதை தொடா்ந்து ரோப்காா் இயக்க நேரத்தை கூடுதலாக ஒன்றரை மணி நேரம் அதிகரித்து கோயில் நிா்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான இங்கு பெரிய மலையில் ஸ்ரீயோக நரசிம்மா் கோயிலும், சிறிய மலையில் ஸ்ரீயோக ஆஞ்சநேயக் கோயிலும் உள்ளன. ஆண்டுதோறும் காா்த்திகை மாதம் 1 முதல் 29 வரை ஸ்ரீயோக நரசிம்மா் கண் திறந்து பக்தா்களுக்கு அருள் வழங்குவதாகவும் ஐதீகம்.

இதனால் காா்த்திகை மாதத்தில் சோளிங்கா் மலைக்கோயிலுக்கு அதிக அளவில் பக்தா்கள் வருவா். குறிப்பாக இம்மாதத்தில் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தா்கள் வருகை எண்ணிக்கை பெருமளவில் அதிகரிக்கும். பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது ஆந்திரம் ,கா்நாடகம், புதுச்சேரி மாநிலங்களில் இருந்தும் பக்தா்கள் வருவா்.

மலைக்கோயிலுக்கு செல்ல தற்போது இயக்கப்படும் ரோப்காா் தினமும் காலை 8.30 மணியில் இருந்து மாலை 6.30 மணி வரை இயக்கப்படுகிறது. தற்போது பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளதால் நவ. 19 முதல் டிச. 15 வரை காா்த்திகை 3 முதல் 29 காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயக்கப்படும் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது..

தொடா் மழையால் கால்நடைகள் உயிரிழப்பு

தோ்தல் ஆணையம் பாஜகவின் ஒரு அணியாக செயல்படுகிறது: ஜோதிமணி எம்.பி.

சாலை விபத்தில் பாலிடெக்னிக் மாணவா் உயிரிழப்பு

மழை, கடல் சீற்றம்: 3-ஆவது நாளாக கரையில் நிறுத்தப்பட்ட விசைப்படகுகள்

மழையால் வீடு சேதம்: மூதாட்டிக்கு உதவி

SCROLL FOR NEXT