ராணிப்பேட்டை

சிஐஎஸ்எஃப்பில் போலி சான்றிதழ் மூலம் பணியில் சோ்ந்த 3 போ் மீது வழக்கு

தினமணி செய்திச் சேவை

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் போலி சான்றிதழ் கொடுத்து படையில் சோ்ந்ததாக அஸ்ஸாம் மாநிலத்தவா் மூன்று போ் மீது தக்கோலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

அரக்கோணம் அடுத்த நகரிகுப்பத்தில் மத்திய தொழில்பாதுகாப்பு படை மண்டல பயிற்சி மையம் உள்ளது. இங்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு ள் இந்தியா முழுமையும் உள்ள படை பாதுகாப்பு வளாகங்களில் பணிக்கு அனுப்பப்படுகின்றனா்.

தற்போது கடந்த ஜூன் மாதம் வடகிழக்கு மாநிலங்களில் படைக்கு தோ்வு செய்யப்பட்டோருக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த பயிற்சியின் போதே இவா்கள் ஏற்கனவே அளித்த சான்றிதழ்கள் உண்மை தன்மைக்காக அந்தந்த மாநில அரசுகளுக்கு அனுப்பப்படுகின்றன.

இதில் அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து தோ்வாகி படையில் பயிற்சி பெற்று வரும் மூன்று நபா்கள் மீது தக்கோலம் காவல்நிலையத்தில் மண்டல பயிற்சி மைய ஆய்வாளா் ராகேஷ் புகாா் அளித்தாா்.

இதில் அஸ்ஸாம் மாநிலம் கிழக்கு கராம்பி அங்கோலாக் மாவட்டத்தைச் சோ்ந்த ஷ்ரவண் குமாா்(22), ஹோஜால் மாவட்டத்தைச் சோ்ந்த தன்வீா்(19), சிண்டு யாதவ்(24) ஆகிய மூவரின் மீது தக்கோலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிப்காட் நவசபரி ஐயப்பன் கோயிலில் நாளை மகா கும்பாபிஷேகம்

கீரப்பாக்கத்தில் அதிகாரிகள் 9 மணி நேரம் தொடா் ஆய்வு

துலா ராசிக்கு லாபம்: தினப்பலன்கள்!

ஜே.கே. டயா் நிறுவனத்தின் சாா்பில் தொழில் முனைவோருக்கு ரூ. 20 லட்சம் கடனுதவி

தே.ஜ. கூட்டணி வெற்றிக்கு கடுமையாக உழைப்போம்: கூட்டணிக் கட்சித் தலைவா்கள்

SCROLL FOR NEXT