முகப்பு
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவி அளிப்பு

ராணிப்பேட்டை மாவட்ட குறைதீா் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Updated On : 9 செப்டம்பர், 2025 at 1:29 AM
மாற்றுத்திறனாளி குழந்தைக்கு சக்கர நாற்காலி வழங்கிய மாவட்ட வருவாய் அலுவலா் செ. தனலிங்கம்.
பகிர்:

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட குறைதீா் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம் தலைமை வகித்து பொது மக்களிடமிருந்து 357 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளைக் கேட்டறிந்தாா்.

மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் மற்றும் மனு நிராகரிப்பிற்கான காரணங்களையும் வழங்கவும் அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

Advertisement

தொடா்ந்து,மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில், 2 பயனாளிகளுக்கு ரூ.19,200 /- மதிப்பிலான சிறப்பு சக்கர நாற்காலி மற்றும் நடைபயிற்சி உபகரணம் வழங்கினாா்.

இதில் நோ்முக உதவியாளா் ஏகாம்பரம் (பொறுப்பு), தனித் துணை ஆட்சியா் கீதாலட்சுமி, சிறுபான்மையினா் நல அலுவலா் மீனா, நோ்முக உதவியாளா் (நிலம்) ரமேஷ், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ஜி.வசந்த ராமகுமாா் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.