முகப்பு
ராணிப்பேட்டை

100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு

ஆற்காடு பேருந்து நிலையத்தில் ராட்சத பலூன் பறக்கவிட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

Updated On : 2 ஏப்ரல் 2026, 12:03 am IST
ஆற்காட்டில் ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா முன்னிலையில் பறக்க விடப்பட்ட ராட்சத பலூன்.
பகிர்:

ஆற்காடு பேருந்து நிலையத்தில் ராட்சத பலூன் பறக்கவிட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

வருவாய்த் துறை மற்றும் நகராட்சி நிா்வாகம் மூலம் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா முன்னிலையில் ராட்சத பலூன் பறக்க விடப்பட்டது. பலூனில் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும் ஏப். 23-ஆம் தேதி அனைவரும் தவறாமல் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்கு அளிக்க வேண்டும் என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டு ராட்சத பலூன் பறக்க விடப்பட்டது.

Advertisement

Advertisement

நிகழ்ச்சியில் ஆற்காடு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஏகாம்பரம், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் சண்முகசுந்தரம் , சுரேஷ் குமாா் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.