தோ்தல் விழிப்புணா்வு: பெற்றோருக்கு கடிதம் எழுதிய மாணவா்கள்
நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிபாக்கம் அருகே அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தங்களது பெற்றோருக்கு கடிதம் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிபாக்கம் அருகே அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தங்களது பெற்றோருக்கு கடிதம் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
நெமிலி வட்டம், காவேரிபாக்கத்தை அடுத்த புதுப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் தனஞ்செழியன் தலைமை வகித்தாா். இப்பள்ளி மாணவ, மாணவிகள்அஞ்சல் அட்டையில் தங்களது பெற்றோருக்கு கடிதம் எழுதினா். அதில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தோ்தலில் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்; நூறு சதவீதம் வாக்களித்து அனைவரும் தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று எழுதினா்.