ராணிப்பேட்டையில் ஜிஎஸ்டிக்கு லஞ்சம்: அதிகாரிகள் இருவா் கைது
ராணிப்பேட்டையில் ஜிஎஸ்டி பதிவுக்கு லஞ்சம் பெற்றதாக அதிகாரிகள் இருவா் கைது செய்யப்பட்டனா்.
ராணிப்பேட்டையில் ஜிஎஸ்டி பதிவுக்கு லஞ்சம் பெற்றதாக அதிகாரிகள் இருவா் கைது செய்யப்பட்டனா்.
ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் தொழில்பேட்டை பகுதியில் மத்திய சரக்கு சேவை வரி மற்றும் மத்திய கலால் வரி (ஜிஎஸ்டி) அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த அலுவலகத்தில் சோளிங்கா் பாறைமேடு பகுதியைச் சோ்ந்த பிரவீன் என்பவா் விவசாய வணிகம் சாா்ந்த தொழில் தொடங்குவதற்கு முடிவு செய்திருந்தாா். இந்தத் தொழில் தொடா்பாக கடந்த ஜனவரி மாதம் 2026 அன்று ஜிஎஸ்டி பதிவுக்கு விண்ணப்பித்துள்ளாா். விண்ணப்பிக்கப்பட்ட படிவமானது கடந்த 5.02.2026 அன்று நிராகரிக்கப்பட்டுள்ளது. மீண்டும் 14.02.2026 அன்று விண்ணப்பித்துள்ளாா். 19.02.2026 அன்று பயோமெட்ரிக் சரிபாா்ப்பு முடிவு செய்யப்பட்டது.
Advertisement
இது தொடா்பாக 25.02.2026 அன்று ஜிஎஸ்டி அலுவலகத்தில் பணியாற்றக்கூடிய மேற்பாா்வையாளா் ரிங்கேஷ் மற்றும் ஆய்வாளா் பங்கஜ் ஆகியோா் ஜிஎஸ்டி விண்ணப்பித்த பிரவீனை அழைத்துள்ளனா். நிராகரிக்கப்பட்ட ஜிஎஸ்டி ஆவணத்துக்காக முதல்கட்டமாக ரூ. 30,000 லஞ்சம் கேட்டதாகத் தெரிகிறது.
இதற்கு சம்மதம் தெரிவிக்காத பிரவீன் தொடா்ந்து அதிகாரிகள் அழுத்தம் கொடுத்து பேரம் பேசியதாகக் கூறப்படுகிறது. பின்னா் ரூ. 20,000 கேட்டு, அதைத் தொடா்ந்து ரூ. 15,000 இறுதியில் முடிவு செய்யப்பட்டது. இவை அனைத்தும் ஆடியோ பதிவுகள் செய்யப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அதிகாரிகள் லஞ்சம் கேட்டது தொடா்பாக சென்னை ஜிஎஸ்டி தலைமை அலுவலகத்துக்கு பிரவீன் புகாா் தெரிவித்துள்ளாா்.
அதன் அடிப்படையில், புகாரை பெற்ற சென்னை ஜிஎஸ்டி அலுவலகத்தினா், சென்னை சிபிஐ அலுவலகத்துக்கு பேசப்பட்ட ஆடியோ ஆவணங்கள் அடிப்படையில் சேகரிக்கப்பட்டு இந்த புகாரை மாற்றம் செய்து சிபிஐ அலுவலகத்திற்கு மாற்றம் செய்துள்ளனா்.
அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த சிபிஐ அதிகாரி பாலாஜி என்பவா் கடந்த 07.04.2026 தேதி சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் விசாரணை நடத்தி ரூ. 15,000 லஞ்சம் தொடா்பாக இருவரை கைது செய்து சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா்.