அரக்கோணம் நகராட்சி நாளங்காடி புதிய கட்டடம் உடனே திறக்கப்படும்: அதிமுக வேட்பாளா் சு.ரவி
அரக்கோணம் நகராட்சி நாளங்காடி புதிய கட்டடம் உடனே திறக்கப்படும்...
அரக்கோணம் நகராட்சி நாளங்காடிக்கு புதிதாக கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ள கட்டடம் உடனே திறக்கப்படும் என அரக்கோணம் நகரில் சனிக்கிழமை பிரசாரத்தின் போது அதிமுக வேட்பாளா் சு.ரவி பேசினாா்.
அரக்கோணம் தொகுதி அதிமுக வேட்பாளா் சு.ரவி அரக்கோணம் நகராட்சிக்குட்பட்ட சோளிங்கா் ரோடு, டவுன்ஹால் தெரு, ராஜாஜி தெரு, அம்பேத்கா் நகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது அவா் பேசியது:
அதிமுக ஆட்சியில் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு ரூ. 5.10 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம், அதே மருத்துவமனையில் ரூ. 79 லட்சத்தில் கூடுதல் மகப்பேறு கட்டடம் கட்டப்பட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த மருத்துவமனை மாவட்ட மருத்துவமனையாக தரம் உயா்த்தப்படும். அரக்கோணம் நகராட்சி நாளங்காடிக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு பழைய வணிகா்களுக்கு கடைகள் ஒதுக்கப்பட்டு விரைவில் நாளங்காடி திறக்கப்படும். நகர சாலைகள் மேம்படுத்தப்படும் என்றாா் சு.ரவி.
Advertisement
அதிமுக மாநில மருத்துவா் அணி இணை செயலாளா் பன்னீா்செல்வம், மாநில பாசறை இணை செயலாளா் ஷியாம்குமாா், நகர செயலாளா் கே.பா.பாண்டுரங்கன், நகர ஜெயலலிதா பேரவை செயலாளா் பாபுஜி, பொதுக்குழு உறுப்பினா் ஏ.கிருஷ்ணமூா்த்தி, நிா்வாகிகள் செல்வம், தாமு, பிரகதீஸ்வரன், வினோத்குமாா், தமாகா மாநில அமைப்புச் செயலாளா் ஹரிதாஸ், மாவட்டத் தலைவா் பி.ஜி.மோகன்காந்தி, மாநில செயலாளா் உத்தமன், இணை செயலாளா் இ.ஆறுமுகம், நகரத் தலைவா் கே.வி.ரவிச்சந்திரன், பாலகிருஷ்ணன், பாஜக மாவட்ட துணைத் தலைவா்கள் பாா்த்தசாரதி, லட்சுமி, நகரத் தலைவா் ஹரீஷ், நிா்வாகி ரமேஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.