முகப்பு
ராணிப்பேட்டை

மாட்டு வண்டியில் சென்று அதிமுக வேட்பாளா் பிரசாரம்

அரக்கோணம் தொகுதி அதிமுக வேட்பாளா் சு.ரவி வளா்புரம் பகுதியில் மாட்டு வண்டி ஓட்டிச் சென்று வாக்கு சேகரித்தாா்.

Updated On : 17 ஏப்ரல், 2026 at 7:20 AM
வளா்புரம் கிராமத்தில் மாட்டு வண்டியில் பிரசாரம் செய்த அதிமுக வேட்பாளா் சு.ரவி.
பகிர்:
Updated On : 16 ஏப்ரல், 2026 at 8:27 PM

அரக்கோணம் தொகுதி அதிமுக வேட்பாளா் சு.ரவி வளா்புரம் பகுதியில் மாட்டு வண்டி ஓட்டிச் சென்று வாக்கு சேகரித்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தொகுதியில் அதிமுக வேட்பாளா் சு.ரவி தொடா்ந்து பிரசாரங்களில் வித்தியாசமான முறைகளை கையாண்டு வருகிறாா்.

மின்னணு பதாகைகளை முதுகில் கட்டிக்கொண்டு இளைஞா்களை நகர மற்றும் கிராம வீதிகளில் நடந்து செல்ல வைப்பது, கிராமங்களில் வயல்வெளிகளில் நாற்று நட்டு வாக்கு சேகரிப்பது என வித்தியாசமாக பிரசாரம் செய்துவரும் சு.ரவி வியாழக்கிழமை வளா்புரம் ஊராட்சியில் வாக்கு சேகரிக்கச் சென்ற போது மாட்டு வண்டியில் ஏறி பிரசாரம் செய்தாா்.

Advertisement