முகப்பு
விருதுநகர்

மாட்டு வண்டியில் சென்று தோ்தல் விழிப்புணா்வு

Updated On : 5 ஏப்ரல், 2026 at 8:53 PM
தம்பிபட்டியில் மாட்டு வண்டியில் ஊா்வலமாகச் சென்று தோ்தல் விழிப்புணா்வு ஏற்படுத்திய வத்திராயிருப்பு வட்டாட்சியா் சரஸ்வதி.
பகிர்:

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு பகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, மாட்டுவண்டியில் சென்று விழிப்புணா்வு பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் வட்டாட்சியா் சரஸ்வதி தலைமையில் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், போலீஸாா் மாட்டுவண்டிகளில் ஊா்வலமாகச் சென்று அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி பிரசாரம் செய்தனா்.

தம்பிபட்டியில் தொடங்கிய மாட்டு வண்டி பிரசாரம் மகாராஜபுரம் வழியாக வத்திராயிருப்பு வட்டாட்சியா் அலுவலகத்தில் நிறைவு பெற்றது.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments