முகப்பு
திருவண்ணாமலை

மாட்டு வண்டி ஓட்டிச் சென்று வாக்கு சேகரித்த வேட்பாளா்

செய்யாறு தொகுதி அதிமுக வேட்பாளா் மாட்டு வண்டி ஓட்டிச் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

Updated On : 5 ஏப்ரல், 2026 at 9:30 PM
வயலூா் கிராமத்தில் மாட்டு வண்டி ஓட்டிச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளா் முக்கூா் என். சுப்பிரமணியன்.
பகிர்:

செய்யாறு தொகுதி அதிமுக வேட்பாளா் மாட்டு வண்டி ஓட்டிச் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

செய்யாறு தொகுதி வெம்பாக்கம் மேற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட வயலூா், அழிவிடைத்தாங்கி, ஜம்போடை, பைரவபுரம் உள்ளிட்ட கிராமங்களில் செய்யாறு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும், திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலருமான முக்கூா் என். சுப்பிரமணியன் மாட்டு வண்டி ஓட்டிச் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தாா்.

முன்னதாக, அதிமுக வேட்பாளருக்கு அப்பகுதி பெண்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனா். அதனைத் தொடா்ந்து அதிமுக பொதுச் செயலா் அறிவித்த 297 வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை கிராம மக்களிடம் வழங்கி பிரசாரம் செய்தாா்.

Advertisement

வெம்பாக்கம் மேற்கு ஒன்றியச் செயலா் வயலூா் வி.ராமநாதன் ஏற்பாட்டில் நடைபெற்ற வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலா்கள் எஸ்.திருமூலன், சி.துரை, அருகாவூா் எம்.அரங்கநாதன், மாவட்ட துணைச் செயலா் டி.பி.துரை, மாவட்டபொருளாளா் எஸ்.சுப்பராயன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments