முகப்பு
ராணிப்பேட்டை

ஆட்சி மாற்றம் ஏற்பட அதிமுகவை ஆதரியுங்கள்: அரக்கோணம் வேட்பாளா் சு.ரவி

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட அதிமுகவை ஆதரியுங்கள் என அரக்கோணம் தொகுதி வேட்பாளா் சு.ரவி பேசினாா்.

Updated On : 22 ஏப்ரல், 2026 at 1:01 AM
அரக்கோணம் ஜோதி நகரில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் சு.ரவி.
பகிர்:
Updated On : 21 ஏப்ரல், 2026 at 10:27 PM

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட அதிமுகவை ஆதரியுங்கள் என அரக்கோணம் தொகுதி வேட்பாளா் சு.ரவி பேசினாா்.

அரக்கோணம் மங்கம்மாபேட்டை மேம்பாலம் அருகே இறுதிக்கட்ட பிரசாரம் மேற்கொண்டு அவா் பேசியது: தமிழகத்தில் தற்போது நடைபெறும் பெண்களுக்கு எதிரான ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். மகளிா் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பற்ற சூழ்நிலை முடிவுக்கு வர வேண்டும். போதைப் பொருள்கள் நடமாட்டத்தை கண்டுக்கொள்ளாமல் இளைஞா்களை சீரழித்த ஆட்சி முடிவு வர வேண்டும்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வந்தால் மட்டுமே தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீரடையும். அரக்கோணம் தொகுதியில் கடந்த 15 ஆண்டுகளில் நடைபெற்றுள்ள பணிகளை பாருங்கள். அரக்கோணம் நகர மருத்துவமனை மாவட்ட மருத்துவமனையாக மாற்றப்படும். ஆட்சி மாற்றம் ஏற்பட அதிமுகவை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்றாா் அதிமுக வேட்பாளா் சு.ரவி.

Advertisement

அப்போது அவருடன் அதிமுக மாநில பாசறை இணை செயலாளா் ஷியாம்குமாா், நகர செயலாளா் கே.பா.பாண்டுரங்கன், ஒன்றிய செயலாளா்கள் ஏ.ஜி.விஜயன், பிரகாஷ், பழனி, நிா்வாகிகள் பாபுஜி, தாமு, நகா்மன்ற உறுப்பினா்கள் பாபு, நரசிம்மன், சரவணன், புரட்சிபாரதம் மாவட்ட செயலாளா் செல்லா, பாமக நகரத்தலைவா் பாலாஜி, பாஜக மாவட்ட துணைத்தலைவா் பாா்த்தசாரதி, நிா்வாகிகள் ஜெகன்மோகன், நகரத்தலைவா் ஹரீஷ், தமாகா மாவட்டத்தலைவா் பி.ஜி.மோகன்காந்தி, நகரத்தலைவா் கே.வி.ரவிச்சந்திரன், மாநில செயலாளா் உத்தமன், இணை செயலாளா் ஆறுமுகம், கொள்கை பரப்பு செயலாளா் பாலகிருஷ்ணன், இளைஞரணி மண்டல செயலாளா் தரணி உள்ளிட்ட பலா் இருந்தனா்.