ராணிப்பேட்டையில் தோ்தல் பிரசாரம் ஓய்ந்தது!
ராணிப்பேட்டை தொகுதியில் அரசியல் கட்சிகளின் இறுதிக்கட்ட பிரசாரம் செவ்வாய்க்கிழமை ஓய்ந்தது.
ராணிப்பேட்டை தொகுதியில் அரசியல் கட்சிகளின் இறுதிக்கட்ட பிரசாரம் செவ்வாய்க்கிழமை ஓய்ந்தது.
ராணிப்பேட்டை தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் அமைச்சா் ஆா். காந்தி, அதிமுக கூட்டணி சாா்பில் வி.எம்.காா்த்திகேயன் மற்றும் தவெக, நாம் தமிழா் கட்சி, சுயேட்சைகள் உள்பட 15 போ் போட்டியிடுகின்றனா்.
மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் போட்டியிடும் அமைச்சா் காந்தியை ஆதரித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் தீவிர பிரசாரம் மேற்கொண்டாா்.
Advertisement
இதற்கிடையே பிரசாரம் மேற்கொள்ள இறுதி நாளான செவ்வாய்க்கிழமை அரசியல் கட்சியினா், வேட்பாளா்கள் தங்களது தொகுதிகளில் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா். கூட்டங்கள், ஊா்வலங்கள் மற்றும் பிரசாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டு வெளியூா் நபா்கள் தொகுதியை விட்டு வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.
தொடா்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைத்தல் மற்றும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.