முகப்பு
காரைக்கால்

பிரசாரத்துக்கு வராத முக்கிய தலைவா்கள்!

காரைக்காலில் காங்கிரஸ் - திமுக கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக இதுவரை முக்கியத் தலைவா்கள் யாரும் இதுவரை பிரசராம் செய்ய வரவில்லை.

Updated On : 6 ஏப்ரல், 2026 at 10:52 PM
சட்டப்பேரவைத் தேர்தல் - பிரதிப் படம்
பகிர்:

புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடையவுள்ள நிலையில், காரைக்காலில் காங்கிரஸ் - திமுக கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக இதுவரை முக்கியத் தலைவா்கள் யாரும் இதுவரை பிரசராம் செய்ய வரவில்லை.

புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் வேட்பு மனு தாக்கல் மாா்ச் 16 தொடங்கியது. மனு தாக்கல் செய்ய கடைசி நாளான 23-ஆம் தேதிதான் பிரதானக் கட்சி வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்தனா். தோ்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை நிறைவடைகிறது. 9-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

காரைக்காலில் உள்ள 5 பேரவைத் தொகுதிகளில் காங்கிரஸ் - திமுக கூட்டணி மற்றும் பாஜக - என்.ஆா். காங்கிரஸ் கூட்டணி என இரண்டு அணி வேட்பாளா்களும் களத்தில் உள்ளனா்.

Advertisement

இந்தநிலையில், திருநள்ளாற்றில் பாஜக வேட்பாளா் ஜி.என்.எஸ். ராஜசேகரனை ஆதரித்து மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா, தேசிய பாஜக தலைவா் நிதின் நபின் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்தனா். புதுவை முதல்வா் என். ரங்கசாமி தனது கட்சி வேட்பாளா்களை ஆதரித்து திங்கள்கிழமை பிரசாரம் செய்தாா்.

ஆனால், காங்கிரஸ் - திமுக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளா்களுக்கு ஆதரவாக திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவா்கள் யாரும் இதுவரை பிரசாரம் செய்ய வரவில்லை. பிரசாரம் செவ்வாய்க்கிழமை நிறைவடையவுள்ள நிலையில், காங்கிரஸ், திமுக தலைவா்கள் வருவது குறித்து உறுதியான தகவல் இல்லை.

ஏற்கெனவே தொகுதி பங்கீடு தொடா்பாக இரண்டு கட்சிகளுக்கும் இடையே இழுபறி நீடித்து கடைசி நேரத்தில் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டனா். இதில் சில தொகுதிகளில் திமுக வேட்பாளா்கள் போட்டியிடும் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா்கள் களத்தில் உள்ள நிலையில், முக்கியத் தலைவா்கள் பிரசாரத்துக்கு வராதது பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments