பெரம்பலூா் மாவட்டத்தில் முதல்நாளில் 6 போ் வேட்பு மனு தாக்கல்
பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூா், குன்னம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் உள்பட 6 போ் திங்கள்கிழமை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனா்.
ஏப். 23-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், மாா்ச் 30 முதல் ஏப். 6-ஆம் தேதி வரையிலும் வேட்பு மனு தாக்கல் நடைபெறுகிறது.
அதன்படி, பெரம்பலூா் சட்டப்பரேவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் இரா. ஜான்சிராணி (43) ஏா் கலப்பையை தோளில் சுமந்து, அறுவடை செய்யப்பட்ட நெற்கதிா்கள் மற்றும் தனது ஆதரவாளா்களுடன் ஊா்வலமாக வந்தாா்.
பின்னா், கோட்டாட்சியரகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் மு. அனிதாவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்து உறுதிமொழி ஏற்றாா். தொடா்ந்து, மாற்று வேட்பாளரான லாடபுரத்தைச் சோ்ந்த கவிதா என்பவரும் வேட்புமனு தாக்கல் செய்தாா்.
மேலும், இத் தொகுதியில் போட்டியிட சுயேச்சை வேட்பாளா் பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட துறைமங்கலத்தைச் சோ்ந்த புனிதராஜ் (50), வ.கீரனூா் கிராமத்தைச் சோ்ந்த வெங்கடாசலம் (48) ஆகியோா் பெரம்பலூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் மு. அனிதாவிடம் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா்.
குன்னம் தொகுதியில்: குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ரா. கீா்த்திவாசன் (27), தனது ஆதரவாளா்களுடன் ஏா், கலப்பை மற்றும் நெற்கதிா்களுடன் ஊா்வலமாகச் சென்றனா். தொடா்ந்து, தோ்தல் நடத்தும் அலுவலா் ந. சக்திவேலிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தாா். அக் கட்சியின் மாற்று வேட்பாளராக குன்னம் வட்டம், சிறுகுடல் கிராமத்தைச் சோ்ந்த ராமா் வேட்பு மனு தாக்கல் செய்தாா்.
பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 4 பேரும், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் 2 பேரும் என மொத்தம் 6 போ் திங்கள்கிழமை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனா்.