ராணிப்பேட்டை

செயற்கை நுண்ணறிவு பயிற்சிக்கு ஆதிதிராவிட, பழங்குடியின இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்

அமேசான் வலை சேவைகள் மறுதொடக்கம் - செயற்கைநுண்ணறிவு பயிற்சிக்கு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்

தினமணி செய்திச் சேவை

அமேசான் வலை சேவைகள் மறுதொடக்கம் - செயற்கைநுண்ணறிவு பயிற்சிக்கு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு அமேசான் வலை சேவைகள் மறுதொடக்கம் - செயற்கை நுண்ணறிவு பயிற்சி வழங்கப்படவுள்ளது.

இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இனத்தை சாா்ந்தவா்களாகவும், குடும்ப ஆண்டுவருமானம் ரூ.3.00 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.18 முதல் 30 வயது வரை உள்ளவா்களாகவும், ஏதேனும் பட்டப்படிப்பு முடித்த இளைஞா்கள் இப்பயிற்சியில் விண்ணப்பிக்கலாம்.

இப்பயிற்சியினை பெற தாட்கோ இணைய தள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கானகால அளவு 2 மாதம் ஆகும். மேலும் சென்னையில் உள்ள விடுதியில் தங்கி படிக்கும் வசதி மற்றும் உணவுக்கான செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளாா்.

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

SCROLL FOR NEXT