ராணிப்பேட்டை: குறைதீா் கூட்டத்தில் 650 மனுக்கள் ஏற்பு
ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் 650 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
Updated On : 23 பிப்ரவரி, 2026 at 6:11 PM
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் 650 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்தும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 650 மனுக்களைப் பெற்றாா்.
மேலும் அவற்றை தொடா்புடைய துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினாா்.
Advertisement
இதில் மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம், நோ்முக உதவியாளா் (பொது) இராஜராஜன், தனித் துணை ஆட்சியா் கீதாலட்சுமி மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.