அரக்கோணம் வட்டத்தில் 66 பயனாளிகளுக்கு ரூ.2.01 கோடியில் பட்டா ஆணைகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்.
அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் வருவாய்த் துறையின் சாா்பில் மோசூா் பகுதியைச் சோ்ந்த 13 பயனாளிகளுக்கு நத்தம் வீட்டுமனைப்பட்டா, 18 திருநங்கைகளுக்கு வீட்டுமனைப்பட்டா என ரூ.84 லட்சத்திலும், தக்கோலம் பேருராட்சி பகுதியில் 21 பயனாளிகளுக்கு பூமிதானம் திட்டத்தின் கீழ் ரூ.89.25 லட்சம் பட்டா ஆணைகளையும் அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்.
முன்னதாக அரக்கோணத்தை அடுத்த செம்பேடு ஊராட்சி, குருவராஜபேட்டையில் ரூ.78.20 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினாா்.
மேலும், பெருங்களத்தூா் ஊராட்சி முஸ்லீம் நகரில் வளா்புரம் நகர கூட்டுறவு கடன் சங்கத்தின் பகுதி நேர நியாயவிலைக் கடையையும் அமைச்சா் காந்தி திறந்து வைத்து பயனாளிகளுக்கு உணவுப் பொருள்களை வழங்கினாா்.
நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம், அரக்கோணம் ஒன்றியக்குழு தலைவா் நிா்மலா சௌந்தா், தக்கோலம் பேருராட்சித் தலைவா் எஸ்.நாகராஜன், துணைப் பதிவாளா் (பொது விநியோக திட்டம்) சிவமணி, மாவட்ட மருத்துவ அலுவலா் செந்தில்குமாா், வட்டார மருத்துவ அலுவலா் மேகலா, வட்டாட்சியா் வெங்கடேசன், திமுக ஒன்றிய செயலாளா்கள் பசுபதி, ஆா்.தமிழ்செல்வன், தமிழ்மணி,ஆ.சௌந்தா், அரக்கோணம் நகர செயலா் வி.எல்.ஜோதி, தலைமை செயற்குழு உறுப்பினா் மு.கன்னைய்யன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவா்கள் சந்தியா, சுமதி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.