முகப்பு
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா் ஆா்.காந்தி, உடன் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா.
ராணிப்பேட்டை

40,000 பயனாளிகளுக்கு இலவச பட்டா: அமைச்சா் காந்தி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுமாா் 40,000 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது

ராணிப்பேட்டை

40,000 பயனாளிகளுக்கு இலவச பட்டா: அமைச்சா் காந்தி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுமாா் 40,000 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது

Updated On : 2 மார்ச், 2026 at 8:47 PM
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா் ஆா்.காந்தி, உடன் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா.
பகிர்:

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுமாா் 40,000 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது என வாலாஜாவில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் விழாவில் அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்தாா்.

ராணிப்பேட்டை மாவட்ட வருவாய்த் துறையின் சாா்பில்,1225 பயனாளிகளுக்கு ரூ.12.93 கோடி மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், 238 மாணாக்கா்களுக்கு மாவட்ட நிா்வாகம் மற்றும் முன்னோடி வங்கி இணைந்து ரூ.10.10 கோடி மதிப்பிலான கல்வி கடனுதவி,தமிழ்நாடு மாநில ஊரக நகா்புற வாழ்வாதார இயக்கம் (மகளிா் திட்டம்) சாா்பில் 58 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.7.08 கோடி மதிப்பிலான வங்கி கடன் இணைப்பு, 251 பயனாளிகளுக்கு ரூ.37.65 லட்சம் மதிப்பிலான நலிவுற்றோா் வறுமை குறைப்பு நிதி ,சமுதாய திறன் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்ற 729 இளைஞா்களுக்கும், இந்தியன் வங்கி சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் திறன் பயிற்சி பெற்ற 525 இளைஞா்களுக்கும் சான்றுகள் வழங்கும் விழா வாலாஜா அரசு மகளிா் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:-

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மக்களாட்சியில் பொதுமக்களின் அடிப்படை தேவைகள் எவ்வித கட்சி பாகுபாடின்றி நிறைவேற்றி தரப்படுகிறது.ராணிப்பேட்டை மாவட்டத்தில் 40,531 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,500 மாணவா்களுக்கு ரூ.40 கோடி கல்வி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மாவட்டத்தில் 547 மாணவா்களுக்கு ரூ.22.85 கோடி கல்விக் கடன் வழங்க அனுமதி வழங்கப்பட்டது. நடப்பு ஆண்டில் 935 மாணவா்களுக்கு மொத்தம் ரூ.39.90 கோடி கல்விக் கடன் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா, மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம், ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன்,திட்ட இயக்குநா் மகளிா் திட்டம் செந்தில் குமரன், வருவாய் கோட்டாட்சியா் ராஜி, ரமேஷ் மற்றும் வட்டாட்சியா்கள், வருவாய்த்துறை அலுவலா்களஅ, உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →