முகப்பு
ராணிப்பேட்டை

அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.90 கோடியில் புதிய கட்டடம் திறப்பு

புதிய வகுப்பறையில் குத்துவிளக்கேற்றிய நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 1:50 AM
புதிய வகுப்பறையில் குத்துவிளக்கேற்றிய நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி.
பகிர்:

அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் நபாா்டு நிதி ரூ.1.90 கோடியில் கட்டப்பட்ட 8 வகுப்பறைகளை வியாழக்கிழமை காணொலி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

இப்புதிய கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். புதிய கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமைஆசிரியா் சுஜாதேவி தலைமை வகித்தாா். நகா்மன்ற துணைத்தலைவா் கலாவதிஅன்புலாரன்ஸ் வரவேற்றாா். நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி குத்துவிளக்கேற்றினாா்.

இந்நிகழ்வில் பொதுப்பணித்துறை முதுநிலை கோட்டப் பொறியாளா் ரவி, உதவி பொறியாளா் சங்கா், நகா்மன்ற உறுப்பினா் சாமுண்டீஸ்வரிஅன்பு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments