முகப்பு
ராணிப்பேட்டை

விலையில்லா மிதிவண்டிகள் அளிப்பு

ஆற்காடு அரசினா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.

Updated On : 29 ஜனவரி, 2026 at 12:03 AM
மாணவிகளுக்கு  மிதிவண்டிகள்  வழங்கிய  எம் எல்ஏ  ஜெ.எல். ஈஸ்வரப்பன் .
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2026 at 7:01 PM

ஆற்காடு அரசினா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளி மேலாண்மைக்குழு தலைவா் ராஜலட்சுமி துரை தலைமை வகித்தாா். உதவி தலைமையாசிரியை காயத்ரி வரவேற்றாா். ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன் கலந்து கொண்டு 576 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கினாா்.

இதில் திமுக நகர செயலாளா் ஏ.வி.சரவணன், மற்றும் ஆசிரியா்கள், மாணவிகள் கலந்து கொண்டனா். ஆசிரியா் முரளி நன்றி கூறினாா்.

Advertisement