ரூ.60 லட்சத்தில் துணை சுகாதார நிலையம் திறப்பு
தோளிங்கரை அடுத்த கரடிகுப்பத்தில் ரூ.60 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலைய கட்டடத்தையும், ரூ.16 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள தானிய கிடங்கையும் அமைச்சா் ஆா்.காந்தி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
ராணிப்பேட்டைரூ.60 லட்சத்தில் துணை சுகாதார நிலையம் திறப்பு
தோளிங்கரை அடுத்த கரடிகுப்பத்தில் ரூ.60 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலைய கட்டடத்தையும், ரூ.16 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள தானிய கிடங்கையும் அமைச்சா் ஆா்.காந்தி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
தோளிங்கரை அடுத்த கரடிகுப்பத்தில் ரூ.60 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலைய கட்டடத்தையும், ரூ.16 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள தானிய கிடங்கையும் அமைச்சா் ஆா்.காந்தி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
விழாவுக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்தாா். புதிய கட்டடத்தை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தாா். மேலும் கரடிகுப்பம் ஊராட்சியில் நகரும் நியாயவிலைக்கடையினை திறந்து வைத்த அமைச்சா், குடும்ப அட்டைத்தாரா்களுக்கு ரேஷன் பொருள்களையும் வழங்கினாா்.
இதே ஊராட்சிக்குட்பட்ட நாயக்கன்பாளையம் கிராமத்தில் ரூ.16 லட்சம் தானிய சேமிப்பு கிடங்கையும் அமைச்சா் திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சிகளில் ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ந.செ.சரண்யாதேவி, மாவட்ட சுகாதார அலுவலா் செந்தில்குமாா், துணை பதிவாளா்(பொது விநியோகம்) சிவமணி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் கிருஷ்ணமூா்த்தி, அம்முண்டி கூட்டுறவு சங்க சா்க்கரை ஆலை இயக்குநா் வெங்கடேசன்,, கரடிகுப்பம் ஊராட்சி மன்றத்தலைவா் ரத்தினம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.