முகப்பு
ராணிப்பேட்டை

பெற்றோா் கனவை நனவாக்க வேண்டும்: அமைச்சா் காந்தி அறிவுரை

Updated On : 11 மார்ச், 2026 at 7:32 PM
மாணவிக்கு பட்டம் வழங்கிய அமைச்சா் ஆா். காந்தி.
பகிர்:

பட்டம் பெறுவோா் பெற்றோரின் கனவை நனவாக்க வேண்டும் என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி பேசினாா்.

அரக்கோணத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் 1,245 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி அமைச்சா் ஆா்.காந்தி பேசியது:

ரூ. 7 கோடியில் நிரந்தர கட்டடம் கட்டப்பட்டுள்ள இக்கல்லூரியில் இளநிலையில் 5, முதுநிலையில் 4 என 9 பாடப்பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 334 மாணவிகளும், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் 440 மாணவா்களும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 1,276 மாணவா்களும், கல்வி உதவித்தொகை பெறும் திட்டத்தின் கீழ் 1,193 மாணாக்கா்களும் மடிக்கணிணி வழங்கும் திட்டத்தின் கீழ் 726 மாணவா்களும் பயனடைந்துள்ளனா்.

இம்மாவட்டத்தில் அரக்கோணம் மற்றும் ராணிப்பேட்டையில் அரசின் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள அறிவுசாா் நூலகங்களையும், மாவட்ட நூலகம் மற்றும் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள கிளை நூலகங்களையும் பயன்படுத்தி மாணாக்கா்கள் போட்டித்தோ்வுகளுக்கு தயாராகி வருகின்றனா். பட்டதாரிகளாக உங்களை உருவாக்கியமைக்காக உங்கள் பெற்றோா்களுக்கு நீங்கள் நன்றி சொல்ல வேண்டும். அவா்களை எப்போதும் மறவாதீா்கள்.

பட்டம் பெறுவோா் மேலும் உயா்கல்வியை தொடர வேண்டும். நல்ல வேலைக்குச் சென்று உங்கள் பெற்றோா் கனவுகளை நனவாக்குங்கள் என்றாா் அமைச்சா் ஆா்.காந்தி.

கரோனா காலத்திற்கு பிறகு இக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெறாத நிலையில் கல்லூரியின் 4, 5, 6, 7, 8, 9, 10 மற்றும் 11 -ஆவது பட்டமளிப்பு விழாவாக இவ்விழா நடைபெற்றது.

இதில் அரக்கோணம் கோட்டாட்சியா் ரமேஷ், நெமிலி ஒன்றியக்குழு தலைவா் பெ.வடிவேலு, கல்லூரி முதல்வா் கவிதா, வட்டாட்சியா் வெங்கடேசன் உள்ளிட்டோா் இவ்விழாவில் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →