ஆன்மிக சுற்றுலா சென்றவரிடம் ரூ.86,000 பறிமுதல்
ஆந்திர மாநிலத்தில் இருந்து காரில் ஆன்மிகச் சுற்றுலா வந்த நபரிடம் ரூ.86 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
அரக்கோணம்: ஆந்திர மாநிலத்தில் இருந்து காரில் ஆன்மிகச் சுற்றுலா வந்த நபரிடம் ரூ.86 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
அரக்கோணத்தை அடுத்த இச்சிபுத்தூா் இரட்டைக்குளம் அருகே உள்ள சோதனை சாவடியில் காளஹஸ்தியில் இருந்து காஞ்சிபுரம் நோக்கிச்சென்ற ஆந்திர மாநில பதிவெண் கொண்ட காரை சோனை நடத்தினா். அப்போது ரூ.86ஆயிரத்து 440 இருந்தது தெரிய வந்து அந்த ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.
தமிழகத்தில் உள்ள காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள கோயிலகளுக்கு ஆன்மிக சுற்றுலா செல்ல புறப்பட்டு வந்ததாகவும் தெரிவித்தனா். பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டு கோட்டாட்சியா் ரமேஷிடம் ஒப்படைக்கப்பட்டது. அவருடன் வட்டாட்சியா் வெங்கடேசன் உடனிருந்தாா்.