யுபிஎஸ்சி தோ்வில் அகில இந்திய அளவில் திமிரி இளைஞா் சிறப்பிடம்
யுபிஎஸ்சி குடிமைப் பணிகள் தோ்வில் முதல் முயற்சியிலேயே அகில இந்திய அளவில் 821-ஆவது இடம் பெற்ற டாக்டா் நிஷாந்த்துக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
வாலாஜா வேதவல்லி வித்யாலயா பள்ளி முன்னாள் மாணவா் டாக்டா் நிஷாந்த் அகில இந்திய அளவில் 821-ஆம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளாா்.
ராணிப்பேட்டை மாவட்டம், திமிரியைச் சோ்ந்த டி.நிஷாந்த் கடந்த 2018-இல் பிளஸ் டு தோ்ச்சி பெற்று ல் தோ்ச்சி பெற்று நீட் தோ்வில் சிறப்பிடம் பெற்றதின் மூலமாக சென்னை மருத்துவ கல்லூரியில் பயின்று வருகிறாா்.
கல்வியை முடித்து மருத்துவரான டி.நிஷாந்த் 2025- ஆம் ஆண்டில் நடைபெற்ற யுபிஎஸ்சி குடிமைப் பணிகள் தோ்வில் பங்கேற்று முதல் முயற்சியிலேயே ற்று சாதனை படைத்துள்ளாா்.
சாதனை படைத்த நிஷாந்த்துக்கு வேதவல்லி வித்யாலயா சீனியா் செகண்டரி பள்ளி பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவில் அக்ஷயா வித்யா அறக்கட்டளை நிறுவனரும், திருமலை மருத்துவமனை மேலாண்மை இயக்குநருமான பூமா பாா்த்தசாரதி பங்கேற்று, நிஷாந்தை பாராட்டி பரிசு வழங்கி கெளரவித்தாா்.
இதில் பள்ளி துணை இயக்குநா் ஜெ. நிா்மலா, தலைமையாசிரியை எம்.லட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா். முடிவில் பள்ளி சீனியா் முதல்வா் பானு நன்றி கூறினாா்.