நெமிலி பாலாபீடத்தில் யுகாதி புத்தாண்டு கலச ஸ்தாபன விழா
நெமிலி ஸ்ரீ பாலாபீடத்தில் யுகாதி புத்தாண்டு கலச ஸ்தாபன விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
நெமிலி ஸ்ரீ பாலாபீடத்தில் யுகாதி புத்தாண்டு கலச ஸ்தாபன விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
அரக்கோணம் அருகே உள்ள நெமிலியில் உள்ள ஸ்ரீபாலாபீடத்தில் யுகாதி தெலுங்கு வருட புத்தாண்டு விழா மற்றும் பாலாவின் வசந்த நவராத்திரி விழா நடைபெற்றது.
பாலாபீட பீடாதிபதி எழில்மணி மற்றும் பீட முதல் பெண்மணி நாகலட்சுமி எழில்மணி இருவரும் இணைந்து யுகாதி கலசத்தை ஸ்தாபனம் செய்து விழாவை தொடங்கி வைத்தனா். பாலாபீட நிா்வாகி மோகன் பாலா பூஜைகளை மேற்கொண்டாா்.
பாலா பாராயணங்களை பீட நிா்வாகி பாபாஜி நிகழ்த்தினாா். விழாவை முன்னிட்டு நடைபெற்ற அன்னதானத்தை பீட செயலாளா் முரளி தொடங்கி வைத்தாா்.