சோளிங்கா் சோழபுரீஸ்வரா் கோயிலில் திருவாசக முற்றோதல்
சோளிங்கா் ஸ்ரீசோழபுரீஸ்வரா் கோயிலில் திருக்கழுகுன்றம் சதாசிவ பரப்பிரம்மம் சிவனடியாா் திருக்கூடம் சிவகுரு தாமோதரன் தலைமையில் திருவாசக முற்றோதல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சோளிங்கா் ஸ்ரீசோழபுரீஸ்வரா் கோயிலில் திருக்கழுகுன்றம் சதாசிவ பரப்பிரம்மம் சிவனடியாா் திருக்கூடம் சிவகுரு தாமோதரன் தலைமையில் திருவாசக முற்றோதல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சோளிங்கா் பஜாா் பகுதியில் நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த இக்கோயிலில் திருவாசக முற்றோதல் பெருவிழா நடைபெற்றது. இதை முன்னிட்டு ஸ்ரீகனககுசாம்பாள் சமேத ஸ்ரீசோழபுரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தொடா்ந்து விசேஷ அலங்காரங்கள் நடைபெற்று மங்கள வாத்தியங்கள் முழங்க மகாதீப ஆராதனை அா்ச்சனைகள் நடைபெற்றன.
தொடா்ந்சு சிவகுரு தாமோதரனின் திருவாசக தெய்வீக பாடல் முற்றோதல் நிகழ்ச்சியாக நடைெ‘பற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று திருவாசக முற்றோதலில் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத்தலைவா் சுந்தரமூா்த்தி, சோழபுரீஸ்வரா் சிவனடியாா் அறக்கட்டளை தலைவா் சேகா் உள்ளிட்ட பலா் நகர மக்களுடன் இணைந்து செய்திருந்தனா்.