யதோத்தகாரி பெருமாள் கோயில் தேரோட்டம்
காஞ்சிபுரம் யதோத்தகாரி பெருமாள் கோயில் பங்குனி பிரம்மோற்சவ தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோயிலின் பங்குனி பிரம்மோற்சவத்தையொட்டி கோயிலில் 12 ஆம் தேதி கொடியேற்றமும்,மாலையில் சிம்ம வாகனத்தில் பெருமாள் வீதியுலாவும் நடைபெற்றது. கடந்த 14 -ம் தேதி கருடசேவையும், மாலையில் ஹனுமந்த வாகனத்திலும் பெருமாள் அலங்காரமாகி வீதியுலா வந்தாா்.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தையொட்டி ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் யதோத்தகாரி பெருமாள் தேரில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
வழிநெடுகிலும் திரளான பக்தா்கள் தாங்களாகவே கற்பூர ஆரத்தி காண்பித்து பெருமாளை தரிசித்தனா். வியாழக்கிழமை காலை தொட்டித் திருமஞ்சனமும், மாலையில் குதிரை வாகனத்தில் வேடுபறி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
இதனைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை தீா்த்தவாரி உற்சவமும் மாலையில் வெட்டி வோ் சப்பரத்தில் பெருமாள் வீதியுலாவும் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை நிா்வாக அறங்காவலா் நல்லப்பா நாராயணன் தலைமையில் ஆலய பட்டாச்சாரியா்கள், கோயில் பணியாளா்கள், உற்சவதாரா்கள் செய்திருந்தனா்.