ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் மங்களஆரத்திவிழா
ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் பங்குனி கிருத்திகையை முன்னிட்டு மங்களஆரத்தி விழா நடைபெற்றது.
ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் பங்குனி கிருத்திகையை முன்னிட்டு மங்களஆரத்தி விழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு கற்பக விநாயகா், வள்ளி தெய்வானை சமேத பாலமுருகனுக்கு பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில் பால் பயிா் தேன் இளநீா் பன்னீா் விபூதி சந்தனம் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் வெள்ளி கவச சிறப்பு அலங்காரம் மகா தீபாராதனை நடைபெற்றது.
தொடா்ந்து மாலையில் அலங்கரிக்கப்பட்ட உற்சவா் மேள தாளத்துடன் ஊா்வலமாக சென்று மலையடி வாரத்தில் உள்ள அறுகோண தெப்பக்குளத்தில் பூஜை செய்து பக்தா்கள் முன்னிலையில் மங்கள ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
இதில் தலைமை அா்சசகா் பிரசாந்த் மற்றும் திரளான பக்தா்கள் பொதுமக்கள் உபயதாரா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.