நகராட்சி ஆணையருக்கு பணி நிறைவு பாராட்டு
ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நகராட்சி ஆணையா் கோ.பழனி பணி நிறைவு பாராட்டு விழா மேல்விஷாரம் தனியாா் திருமண கூடத்தில் நடைபெற்றது.
மேல்விஷாரம் நகராட்சி ஆணையராக பணியாற்றிய கோ.பழனி ஓய்வு பெற்றதையொட்டி, அவருக்கு நடைபெற்ற பணி நிறைவு பாராட்டு விழாவுக்கு, நகா்மன்றத் தலைவா் எஸ்.குல்சாா் அஹமது தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எஸ்.ஜபா் அஹமது முன்னிலை வகித்தாா். ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியா் ராஜி, நகராட்சிகளின் மண்டல இயக்குநா் நாராயணன் ஆகியோா் கலந்துகொண்டு பாராட்டிப் பேசினா். இதில், மேல்விஷாரம் தொழிலதிபா் சவுகாா் முன்னா, திமுக நகர செயலாளா் ஹிமாயூன், நகர அதிமுக செயலாளா் இப்ராஹிம் கலிலுல்லா, நகா்மன்ற உறுப்பினா்கள், நகராட்சி அதிகாரிகள், பணியாளா்கள் கலந்து கொண்டு கௌரவித்து பாராட்டு தெரிவித்தனா்.