அரசு நகரப் பேருந்து எரிந்து சேதம்
ஆற்காடு அருகே அரசு நகரப் பேருந்து சாலையில் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்துள்ளது.
ஆற்காடு அருகே அரசு நகரப் பேருந்து சாலையில் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்துள்ளது.
ஆற்காடு அரசுப் போக்குவரத்து பணிமனையைச் சோ்ந்த நகர பேருந்து ஆற்காட்டிலிருந்து - எசையனூா் கிராமம் வரை இயக்கப்படுகிறது. இந்த பேருந்து வெள்ளிக்கிழமை காலை ஆற்காடு பேருந்து நிலையத்திலிருந்து எசையனூா் சென்று, மீண்டும் ஆற்காடு நோக்கி சென்றுள்ளது. அதில் 56 பயணிகள் பயணம் செய்துள்ளனா். இந்நிலையில், பேருந்து ஆற்காடு அடுத்த சக்கரமல்லூா் அணணாநகா் பகுதியில் வரும்போது பேருந்தின் என்ஜின் பகுதியில் புகைைைை வந்துள்ளது.
இதனைக் கண்ட பேருந்து ஓட்டுநா் சுந்தா் உடனடியாக பேருந்தை சாலையோரம் நிறுத்தி பயணிகளை கீழே இறங்குமாறு கூறினாா். பயணிகள் அனைவரும் கீழே இறங்கியநிலையில் என்ஜின் முன்பகுதியில் தீப்பிடித்து எரியத் தொடங்கி தீ மேலும் பரவி முழவதுமாக எரிந்து சேதமடைந்துள்ளது. தகவல் அறிந்த ராணிப்பேட்டை தீயணைப்பு படையினா் நேரில் சென்று தீயை அணைத்து மேலும் பரவாமல் தடுத்தனா்.
Advertisement
இது குறித்து ஆற்காடு கிராமிய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.